follow the truth

follow the truth

July, 6, 2024
HomeTOP1நாளை பதவியேற்கவுள்ள இந்தியப் பிரதமர் மோடி - ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பு

நாளை பதவியேற்கவுள்ள இந்தியப் பிரதமர் மோடி – ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பு

Published on

இந்தியாவில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை(09) இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாலைத்தீவுகள் ஜனாதிபதி கலாநிதி முஹம்மது முய்சு, சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி அஹமத் ஆபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, மொரிஷீயஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமால் தஹல் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே (Tshering Tobgay) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

200 பாடசாலைகளுக்கு 2,000 டெப் கணனிகள்

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும்,...

அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது

அரச துறையினரின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கும்...

அடுத்த 03 ஆண்டுகளில் 10,026 பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்ப்பு

இலவசக் கல்விச் சட்டம் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்படி, 46% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 93% ஆக...