follow the truth

follow the truth

September, 18, 2024
HomeTOP1நிமலின் முதல் பேரணி நாளை

நிமலின் முதல் பேரணி நாளை

Published on

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை (08) அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை மையத்தில் ‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள், புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சிவில் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இந்தப் பொதுப் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.

பிற்பகல் 2:00 மணிக்கு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் பேரணியில் கிட்டத்தட்ட 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மக்கள் பேரணியை எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய பாரிய பரந்த கூட்டணியாக கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டவர்கள்

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.