follow the truth

follow the truth

April, 14, 2025
HomeTOP2இஸ்ரேலியர்களை அழைக்கும் இந்தியா

இஸ்ரேலியர்களை அழைக்கும் இந்தியா

Published on

இஸ்ரேல் நாட்டவர்களை மாலைத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ள தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையே மாலைத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் குடிமக்கள் வேறு ஒரு நாட்டில் இரண்டாவது கடவுச்சீட்டை வைத்திருந்தாலும் கூட மாலைத்தீவுக்கு வருவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தைக் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர மாலைதீவு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுற்றுலாத் துறையை முழுமையாக நம்பியிருக்கும் மாலைத்தீவு நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலில் இருந்து சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் அவர்கள் வருகையைத் தடை விதிக்கும் வகையிலான முடிவை மாலைத்தீவு எடுத்துள்ளது.

எவ்வாராயினும் மாலைதீவு தடைவிதித்தால் என்ன இந்தியாவில் இஸ்ரேலியர்களுக்கு சுற்றுலா செல்ல எவ்வளவோ இடம் இருக்கிறது என இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளது.

அதில் கேரளா, லக்ஷ்வ தீப், கோவா, நிகோபார் தீவுகளின் புகைப்படங்களை உள்ளடக்கி அந்த பதிவை இட்டுள்ளது. இங்கே உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இங்கே சிறந்த வசதிகள் உண்டு என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை வானில் தோன்றவுள்ள PINK MOON – ஆனால் பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது

இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் 'இளஞ்சிவப்பு நிலவு' (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால்...

ஆண்டுதோறும் சுமார் 33,000 புற்றுநோய் பாதித்தோர் அடையாளம்

நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்...

இந்த வருடம் புத்தாண்டுப் பலகாரங்களுக்கான விலை அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் புதுவருட உணவு மேசை ஒன்றை தயார்படுத்துவதற்கான செலவு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது...