follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP2தேர்தலுக்கு தயாராகும் UNP : ரவி-ஹரின் மற்றும் பிர்தௌஸ் பாரூக் ஆகியோருக்கு புதிய பதவிகள்

தேர்தலுக்கு தயாராகும் UNP : ரவி-ஹரின் மற்றும் பிர்தௌஸ் பாரூக் ஆகியோருக்கு புதிய பதவிகள்

Published on

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று (ஜூன் 2) புதிய அலுவலகத்தை நியமித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அங்கு தேசிய தேர்தல் அமைப்பாளராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தேசிய தேர்தல் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா தேர்தல் பிரதிப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகிகள் குழுவில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு மொஹமட் பிர்தௌஸ் பாரூக் (Mohamed Firdouse Farook) ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராகவும், பொருளாளராக இருந்த மிஸ்பா சத்தார் உப தலைவராகவும் கிரிஷான் தியோடர் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தலைவர் வஜிர அபேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட அதிகாரிகளின் பதவிகளை தொடர்ந்தும் தக்கவைக்க செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

மொஹமட் பிர்தௌஸ் பாரூக் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்களுக்கு அனுமதி

ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட பணிகளை தேர்தல் முடிவடைந்தவுடன் அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்; பொதுமக்களை...

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம்

எதிர்வரும் 27ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என பிரதி...

அலரி மாளிகைக்கு அண்மித்த வீதி மீண்டும் திறப்பு

அலரிமாளிகை வளாகத்திற்கு அருகில் உள்ள வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) பொதுமக்களின்...