நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்றையதினம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம் இந்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
இந்த சந்திப்பின் போது இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களின் ஊடாக பல்வேறு துறைகளில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ நன்றி தெரிவித்ததாகவும் இலங்கையின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.