follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்ஒமிக்ரான் எச்சரிக்கை : கதவுகளைத் தொடர்ந்து மூடும் அவுஸ்திரேலியா!

ஒமிக்ரான் எச்சரிக்கை : கதவுகளைத் தொடர்ந்து மூடும் அவுஸ்திரேலியா!

Published on

புதிய கொவிட் திரிபு வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், வெளிநாட்டவர்களுக்கு தமது எல்லைகளைத் திறக்காதிருப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவுஸ்திரேலிய வீசாவுடன் வெளிநாடுகளில் தங்கியிருப்போருக்கு இன்று முதல் (டிசம்பர் 1) எல்லைகளைத் திறப்பதாக அவுஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும், புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுள்ள ஐந்து பேர் அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதால் எல்லைகளைத் திறக்காதிருப்பதற்கு அவுஸ்திரேலிய தீர்மானித்துள்ளது.
புதிய திரிபு ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் எல்லைகளை மீளத் திறக்கும் தீர்மானத்தை, குறைந்தது 15 நாட்களுக்குத் தாமதப்படுத்த வேண்டும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்ற உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டவர் உள்நுழைய தடை விதிப்பதாக ஜப்பான் நேற்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...