follow the truth

follow the truth

April, 8, 2025
Homeஉள்நாடுபாராளுமன்றம் ஜூன் 4ஆம் திகதி கூடவுள்ளது

பாராளுமன்றம் ஜூன் 4ஆம் திகதி கூடவுள்ளது

Published on

பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை கூட்டப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

இதற்கமைய ஜூன் 4ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் 10.30 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

ஜூன் 6ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை மின்சாரம் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

அன்றையதினம் பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதம் நடைபெறும். ஜூன் 7ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் திறமையான சுகாதார சேவைகளை நிறுவுவது சுகாதார அமைச்சின் பொறுப்பு

நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப தாய்மார் இறப்பு விகிதத்தை ஒரு லட்சத்திற்கு எழுபது ஆகக் குறைக்க வேண்டும் என்றாலும்,...

நாட்டில் வெளிநாட்டு அந்நிய செலாவணி அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணியின் பெறுமதி, 2025 மார்ச் மாதத்தின் இறுதியில் 6.51 மில்லியன் ஐக்கிய...

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம்

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ் திணைக்களத்தின்...