follow the truth

follow the truth

March, 13, 2025
HomeTOP1எரிபொருள் கசிவு : கப்பல் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் கையிருப்பில்

எரிபொருள் கசிவு : கப்பல் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் கையிருப்பில்

Published on

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போது எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் கப்பலை தங்கள் பொறுப்பின் கீழ் கையகப்படுத்தியுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ், குறித்த சம்பவத்திற்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் பழுதுபார்ப்பதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பில் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், கப்பலில் இருந்து ஹைட்ராலிக் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் உரிமையாளரான நிறுவனமும் தவறை ஒப்புக்கொண்டுள்ளதுடன், அதற்கான நட்டஈட்டை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்திய கப்பலின் கப்டன் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு பயணத்தடை விதிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு துறைமுக பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை...

முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொலை

அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர்...

அதிவேக நெடுஞ்சாலை அருகில் வீசப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம்...