follow the truth

follow the truth

April, 18, 2025
Homeஉள்நாடுகடையில் வாங்கிய சோற்று பொட்டலத்தில் 'மர அட்டை'

கடையில் வாங்கிய சோற்று பொட்டலத்தில் ‘மர அட்டை’

Published on

கடையின் உரிமையாளருக்கு 45,000 ரூபா அபராதம் விதித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான், வழக்கு முடியும் வரை உணவகத்திற்கு சீல் வைக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சோற்றுப் பொட்டலத்தை வாங்கியவர் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிட முற்பட்ட போது சோற்றுப் பொட்டலத்துக்குள் ‘மர அட்டை’ இருப்பதைக் கண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர், இது தொடர்பில் திருநவேலி பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, அவர் அதிகாரிகள் குழுவுடன் வந்து விசாரணைகளின் பின்னர், உணவகத்தின் அசுத்தமான தன்மைக்காக தனியான வழக்கு பதிவு செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த இரண்டு வழக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான், ‘மர அட்டை’ இருந்த சம்பவத்திற்காக மாத்திரம் 45,000 ரூபா அபராதம் விதித்துள்ளார்.

அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அறிவித்த மேலதிக நீதவான், உணவக உரிமையாளரை எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

காலி ஹோட்டலில் தாக்குதல் – பொலிஸ் விசாரணை

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக...

16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” நாளை முதல் ஆரம்பம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, நாளை (18)...