follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுவீதி அபிவிருத்தி அதிகார சபையின் அறிவிப்பு

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அறிவிப்பு

Published on

புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘கல்யாணி பொன் நுழைவு’ பாலத்துடன் தொடர்புடைய
வீதிகளை அடையாளம் காண முடியாததால் சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வீதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மட்டுமே புதிய களனி பாலத்தை கடக்க அனுமதிக்கப்படும்.

மேலும் துறைமுக வீதியை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் தற்போது உரிமம் பெற்ற வாகனங்கள் மட்டுமே அவ்வீதியில் அனுமதிக்கப்படுகின்றன.

கொழும்பு நோக்கி வரும் ஏனைய வாகனங்கள் துறைமுக நுழைவாயிலுக்குள் பிரவேசிக்காமல், சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் இடது அல்லது வலமாகத் திரும்ப வேண்டும்.

மேலும் துறைமுகத்தில் இருந்து வரும் கொள்கலன் வாகனங்களுக்கு புதிய களனி பாலத்தின் ஊடாக பயணிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது.

களனி பாலத்தில் பயணிக்க அனுமதிக்கப்படாத கொள்கலன்கள் உட்பட ஏனைய அனைத்து வாகனங்களும், பாலத்திற்கு கீழே உள்ள பேஸ்லைன் வீதியில் பிரவேசித்து, பாலத்திற்கு வெளியே உள்ள பாதையை பயன்படுத்த முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 7 பேர் கொண்ட குழு நியமிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன...

சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமனம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் துணைத் தலைவராக ராசிக்...

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் 'கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை'...