follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுவீதி அபிவிருத்தி அதிகார சபையின் அறிவிப்பு

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அறிவிப்பு

Published on

புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘கல்யாணி பொன் நுழைவு’ பாலத்துடன் தொடர்புடைய
வீதிகளை அடையாளம் காண முடியாததால் சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வீதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மட்டுமே புதிய களனி பாலத்தை கடக்க அனுமதிக்கப்படும்.

மேலும் துறைமுக வீதியை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் தற்போது உரிமம் பெற்ற வாகனங்கள் மட்டுமே அவ்வீதியில் அனுமதிக்கப்படுகின்றன.

கொழும்பு நோக்கி வரும் ஏனைய வாகனங்கள் துறைமுக நுழைவாயிலுக்குள் பிரவேசிக்காமல், சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் இடது அல்லது வலமாகத் திரும்ப வேண்டும்.

மேலும் துறைமுகத்தில் இருந்து வரும் கொள்கலன் வாகனங்களுக்கு புதிய களனி பாலத்தின் ஊடாக பயணிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது.

களனி பாலத்தில் பயணிக்க அனுமதிக்கப்படாத கொள்கலன்கள் உட்பட ஏனைய அனைத்து வாகனங்களும், பாலத்திற்கு கீழே உள்ள பேஸ்லைன் வீதியில் பிரவேசித்து, பாலத்திற்கு வெளியே உள்ள பாதையை பயன்படுத்த முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...