follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP3காலி முகத்திடலில் பலவந்தமாக கேளிக்கை நடாத்தி வரும் சில குழுவினர்

காலி முகத்திடலில் பலவந்தமாக கேளிக்கை நடாத்தி வரும் சில குழுவினர்

Published on

கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பலம் பெற்ற சில குழுவினர் பலவந்தமாக கேளிக்கை விளையாட்டுக்கள் அடங்கிய திருவிழாவை (carnival) நடாத்தி வருவதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விழாவை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனம் கொழும்பு காலி முகத்திடல் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளது.

காலி முகத்திடல் மைதானத்தை சமய விழாவிற்காக முன்பதிவு செய்வதற்காக 45 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஏற்பாட்டாளர்கள் சுமார் இருபது இலட்சம் ரூபாவையே குறித்த நிறுவனத்திற்கு இதுவரை செலுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

அரகலய போராட்டத்தின் பின்னர் கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் மத நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்வுக்கும் இடமளிக்க வேண்டாம் என அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...