follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP2மஹிந்த தலைமையில் முதல் தேர்தல் பிரசாரம்

மஹிந்த தலைமையில் முதல் தேர்தல் பிரசாரம்

Published on

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுஜன பெரமுன நடத்தும் முதலாவது தொகுதி மாநாடு இன்று பிற்பகல் அநுராதபுரம் தலாவையில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார்.
இந்நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட தலைவர் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வடமத்திய முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், பொஹட்டுவ தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர்.

இத்தொகுதி மாநாட்டின் பின்னர் பொஹட்டுவவில் தேர்தல் பிரச்சார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் நாடளாவிய ரீதியில் தொகுதி மாநாடுகள் நடத்தப்படும் எனவும் அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...

பயணச்சீட்டு, மிகுதிப் பணம் வழங்காத பஸ் நடத்துநர்கள் தொடர்பில் முறைபாடு

பஸ்ஸில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும் மிகுதிப் பணத்தையும் வழங்காத பஸ் நடத்துனர்கள் தொடர்பில் முறைப்பாடு...