எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொழிலதிபர்களுக்கானது.
இதன்படி, தொழில்துறையினரின் நிதித் தேவைகள் பிராந்திய மற்றும் மாவட்ட மட்டத்தில் கண்டறியப்பட்டு, வர்த்தக வங்கிகள் ஊடாக மானிய வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 7% மற்றும் 8% போன்ற மானிய வட்டியில் கடன் வழங்கப்படுவதாக தகவல் வெளியானது.