follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஇந்தியாவில் கைது செய்யப்பட்ட ISIS சந்தேக நபர்களில் பொட்ட நௌபரின் மகன்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ISIS சந்தேக நபர்களில் பொட்ட நௌபரின் மகன்

Published on

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இலங்கையர்களில் ஒருவர், பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான மொஹமட் நௌபர் எனும் (பொட்ட நௌபர்) மகன் என இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 27 வயதான மொஹமட் நஃப்ரான் அவர் எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் நீர்கொழும்பில் வசிப்பவர் எனவும் ஏனையவர்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் எனவும் இலங்கையின் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

33 வயதான மொஹமட் நுஸ்ரத், பெரியமுல்லை நீர்கொழும்பு
27 வயதான மொஹமட் நஃப்ரான், கிராண்ட்பாஸ் கொழும்பு
35 வயதான மொஹமட் பாரிஷ் மாளிகாவத்தை கொழும்பு
43 வயதான மொஹமட் ரஸ்டீன் கொழும்பு -13
இவர்களே இந்தியா அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த நான்கு பேர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரத்தியேக விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...