follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுபரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

Published on

2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்,  அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலை தவணை முடிவடைவது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கடந்த 26 ஆம் திகதி விடுத்துள்ள சுற்றறிக்கையில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறும். க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கமைவாக அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும், 2021ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமனம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் துணைத் தலைவராக ராசிக்...

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் 'கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை'...

வருமான வரி செலுத்துவது தொடர்பான அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான அனைத்து வருமான வரியும் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும்...