follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை

உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை

Published on

10வது உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொள்வதற்காக இந்தோனேஷியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) மாநாட்டில் உரையாற்றினார்.

அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி, உலகளாவிய வரி ஏய்ப்பு தொடர்பான சொத்துக்களின் வருடாந்த இலாபம் 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், காலநிலை மாற்றத்திற்கு நிதியளிப்பதற்காக அந்த இலாபத்தின் மீது 10% வரி விதிக்க இலங்கை முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேசியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த 18ஆம் திகதி பாலியில் உள்ள Gust Nura Rai சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

10வது உலக நீர் உச்சிமாநாட்டின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உக்ரேனில் ஏற்படும் மரணங்கள் மற்றும் அழிவுகளுக்கு உலகளாவிய வடக்கு நிதியளிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அழிவுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதில் தயக்கம் காட்டுவதாகவும் தெரிவித்தார். .

மாநாட்டுக்கு முன்னதாக, இதில் பங்கேற்க வந்த அனைத்து நாட்டுத் தலைவர்களும் இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

காலி ஹோட்டலில் தாக்குதல் – பொலிஸ் விசாரணை

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக...

16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” நாளை முதல் ஆரம்பம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, நாளை (18)...