follow the truth

follow the truth

April, 12, 2025
HomeTOP1ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மற்ற அதிகாரிகள் யார்?

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மற்ற அதிகாரிகள் யார்?

Published on

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள டிஸ்மார் காட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் பல மூத்த ஈரானிய அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

அதில் உயிரிழந்த ஏனைய அதிகாரிகளான;

  • வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் (Foreign Minister Hossein Amirabdollahian)
  • கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி (East Azerbaijan Governor Malek Rahmati)
  • கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஈரானிய உச்ச தலைவர் முகமது அலி அலே-ஹஷேமின் பிரதிநிதி (Representative of the Iranian supreme leader in East Azerbaijan Mohammad Ali Ale-Hashem)
  • ஜனாதிபதி காவலரின் தலைவர் மெஹ்தி மௌசவி (Head of presidential guard Mehdi Mousavi)
  • ஹெலிகாப்டரின் விமானி, துணை விமானி மற்றும் பணியாளர்கள்

அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடனான ஒரு நிகழ்வில் இருந்து ரைசியும் அவரது சகாக்களும் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், முன்னாள் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜரீப் (Javad Zarif), ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஹொசைன் அமிரப்துல்லாஹியனின் மரணங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அமிரப்துல்லாஹியனை “என் அன்பான சகோதரர்” என முன்னாள் ஈரானிய வெளியுறவு அமைச்சர் விவரித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட செய்தியில், விபத்து பற்றிய செய்தி “வேதனையானது” என அவர் பதிவு செய்துள்ளார்.

“தியாகிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. உயிர் தியாகிகளுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் அமைதி மற்றும் பொறுமையையும் ஈரானிய மக்களின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை நான் விரும்புகிறேன்.” என அவரது பதிவில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை வானில் தோன்றவுள்ள PINK MOON – ஆனால் பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது

இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் 'இளஞ்சிவப்பு நிலவு' (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால்...

ஏப்ரல் மாதத்தின் 9 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த மாதத்தின் முதல் 9 நாட்களில் நாட்டிற்கு 56,567 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு...

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு 14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம்...