follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉள்நாடுகடந்த 14 நாட்களுக்குள் இலங்கை வந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு

கடந்த 14 நாட்களுக்குள் இலங்கை வந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு

Published on

புதிய ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்களா என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் நாட்டிற்கு வருகை தந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வானது தென்னாபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க தடை விதித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக...

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய...