follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுஅரசாங்க அமைச்சர்கள் மீது சபாநாயகர் குற்றச்சாட்டு (VIDEO)

அரசாங்க அமைச்சர்கள் மீது சபாநாயகர் குற்றச்சாட்டு (VIDEO)

Published on

இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக எந்தவொரு அமைச்சரும் நாடாளுமன்றில் இல்லையென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டியது அவசியமெனவும் சபாநாயகர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

எனவே, எதிர்வரும் நாட்களில் அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றிற்கு அழைக்க வேண்டியதன் அவசியத்தை ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளருக்கு சபாநாயகர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி வருகைதரும் நாட்களில் மாத்திரம் அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றிற்கு வருகை தருவதாக சுட்டிக்காட்டிய சபாநாயகர், எனவே எதிர்காலத்தில் ஜனாதிபதியை ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திற்கு அழைக்க வேண்டிய நிலை உருவாகுமெனவும் குறிப்பிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

அமைச்சர்களின் பொறுப்பில் உள்ள விடயதானங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விசேட...

சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் அழைப்பு

சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல்...

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல்களை கண்டறிய விசேட குழு

அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து கண்டறிய நிறுவன ரீதியாக குழுக்கள் நியமிக்கப்படுவதில்லை. அதற்கான...