கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மண்டபங்களை மேற்பார்வையிட மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பரீட்சை பாடங்கள் தொடர்பில் இதுவரையில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய சூழ்நிலைகள் காரணமாக மேலதிக கண்காணிப்பாளர்களை நியமிக்க பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் பரீட்சை சட்டத்தின் பிரகாரம் பரீட்சைகள் தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுக்கும் உரிமை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.