follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுஇராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ள தர பகுப்பாய்வு அறிக்கை

இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ள தர பகுப்பாய்வு அறிக்கை

Published on

எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையைஇ இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயல்முறைகள் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்போலகே தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த எரிவாயு விபத்துகள் தொடர்பான அறிவியல் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு தொடர்பான வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள் தொடர்பான செய்திகளை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகளை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்ப நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான 12 ஆய்வு அறிக்கைகள் மேலதிக பரிசோதனைகளுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

அமைச்சர்களின் பொறுப்பில் உள்ள விடயதானங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விசேட...

சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் அழைப்பு

சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல்...

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல்களை கண்டறிய விசேட குழு

அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து கண்டறிய நிறுவன ரீதியாக குழுக்கள் நியமிக்கப்படுவதில்லை. அதற்கான...