follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுஇராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ள தர பகுப்பாய்வு அறிக்கை

இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ள தர பகுப்பாய்வு அறிக்கை

Published on

எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையைஇ இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயல்முறைகள் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்போலகே தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த எரிவாயு விபத்துகள் தொடர்பான அறிவியல் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு தொடர்பான வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள் தொடர்பான செய்திகளை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகளை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்ப நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான 12 ஆய்வு அறிக்கைகள் மேலதிக பரிசோதனைகளுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...