ஒமிக்ரோன் எனப்படும் புதிய வகை கொவிட் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விமானப் பயணிகளுக்காக சுகாதார செயலி (Health App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொழில்நுட்ப அமைச்சு மற்றும் விமான நிலையத்தின் கூட்டு முயற்சியாக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.