follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP2'ஈரானுடன் இன்னும் நெருக்கமாக இருப்போம்'

‘ஈரானுடன் இன்னும் நெருக்கமாக இருப்போம்’

Published on

ஈரானுடன் தொடர்ந்தும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதாக உமா ஓயா திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியும் இலங்கை ஜனாதிபதியும் இணைந்து உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஈரானிய தொழில்நுட்பத்துடன் உமா ஓயா திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கும் நாங்கள் உழைத்து வருகிறோம். அம்பாந்தோட்டைக்கு புதிய பொருளாதாரத்தை வழங்குகிறோம். இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ஆறாயிரம் ஹெக்டேயர்களில் பயிர் செய்ய முடியும்.

எதிர்வரும் சில மாதங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி நீர் மின்சாரத்தை வழங்க முடியும்.” என ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.

காலியில் இருக்கும் ஆஸி கிரிக்கெட் பத்திரிகையாளர் பீட்டர் லாலரின் ‘ஆன்லைன்’ கிரிக்கெட் வர்ணனை நிறுத்தம்

இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் இனப்படுகொலை குறித்து ட்விட்டரில் பதிவிடுவது குற்றமாகக் கருதியதால், காலியில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பத்திரிகையாளர்...

ரணிலின் வலையில் சிக்க வேண்டாம் – போராட்டத்திற்கு தயாராகும் SJB

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய...