follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP2ஜூலை முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம்

ஜூலை முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம்

Published on

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் மேல் இடது மூலையில் பயணிகள் பார்க்கக் கூடிய வகையில் கட்டணத்தை காட்டும் மீட்டர் பொருத்துவது கட்டாயம் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் கட்டணங்களை வசூலித்தால் அது தொடர்பான முறைப்பாடுகளை 0112860860 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி (Mobile phone) மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி (Three Wheelers) சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து...

வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் வாகனங்களுக்கான விசேட அறிவித்தல்

சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...