follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1தியத்தலாவ கோர விபத்து - கார் சாரதிகள் கைது

தியத்தலாவ கோர விபத்து – கார் சாரதிகள் கைது

Published on

தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது 7 பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பொலிசார் கைது செய்தனர்.

மேலும் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

2024 Fox Hill மோட்டார் பந்தயத் தொடர் நேற்று (21) காலை தியத்தலாவ நரியாகந்த பந்தயப் பாதையில் ஆரம்பமானது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டி நடைபெற்றது.

பந்தயம் கடைசியாக ஏப்ரல் 21, 2019 அன்று நடத்தப்பட இருந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதன்படி 5 வருடங்களாக போட்டிகள் நடத்தப்படவில்லை எனவும், இம்முறை போட்டியில் அதிகளவான பங்கேற்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(21) காலை ஆரம்பமான இப்போட்டியில் கார் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் இலங்கை இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விபத்து தொடர்பில் தற்போதுள்ள காணொளி நாடாக்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...