follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுமத்திய வங்கி ஆளுநரின் தீர்வை எதிர்ப்பார்த்துள்ள இறக்குமதியாளர்கள்

மத்திய வங்கி ஆளுநரின் தீர்வை எதிர்ப்பார்த்துள்ள இறக்குமதியாளர்கள்

Published on

பருப்பு, சீனி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் மீண்டும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளமை தொடர்பில், மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்பார்த்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் தேங்கியிருந்த கொள்கலன்களை விடுப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு இதற்கு முன்னர் மத்திய வங்கி ஆளுநர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும், தற்போது இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மீண்டும் ஆயிரம் கொள்கலன்கள் இவ்வாறு தேங்கியுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு அதனுடன் தொடர்புடைய பிரிவுகளுக்கு கடந்த வாரம் அறியப்படுத்தியிருந்த போதிலும், அதற்கான தீர்வு இன்னும் கிடைப்பெறவில்லையென அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெறும் சந்திப்பில் கலந்துரையாடவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...