follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1எரிவாயு வெடிப்பு: நாட்டில் சிறந்த இரசாயன ஆய்வுக்கூடம் இல்லை - லசந்த அலகியவன்ன

எரிவாயு வெடிப்பு: நாட்டில் சிறந்த இரசாயன ஆய்வுக்கூடம் இல்லை – லசந்த அலகியவன்ன

Published on

எரிவாயு தொடர்பிலான பரிசோதனைகளுக்கு எமது நாட்டில் சிறந்த இரசாயன ஆய்வுக்கூடமொன்று இல்லை என்றும் இந்த வாரத்துக்குள் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு தீர்வு கொடுக்கப்படுமென்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இன்று நேற்று நடந்தது கிடையாது. நீண்ட நாட்களாக இருந்துவரும் பிரச்சினை. ஆனால் நாட்டில் தற்போது நாட்டில் தற்போது இடம்பெறும் வெடிப்பு சம்பவங்கள்வழமைக்கு மாறானவையாகும்.

1960 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை எமது எரிவாயு தொடர்பில் பரிசோதனை செய்ய நாட்டில் சட்டபூர்வமான இராசயன ஆய்வுக் கூடமொன்று இல்லை. இதுவே உண்மையான நிலைமை.

இதுதொடர்பில் கடந்த வாரம் ஆய்வு செய்திருந்தோம். அந்த ஆய்வுகளின் முதல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. அதனை மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்திருந்தோம். ஒரு அறிக்கையை வைத்து இது தொடர்பில் தீர்மானம் எடுக்கமுடியாது என்று அந்த பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

அதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இரத்தினபுரி, குருநாகல், கம்பஹா, காலி, களுத்துறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் 12 மாதிரிகளை பெற்றுக்கொண்டு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அநேகமாக அந்த அறிக்கை இன்று கிடைக்கலாம்.

அந்த அறிக்கையை மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கவுள்ளோம். இந்த வாரத்துக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இதற்கு வழங்க வேண்டிய தற்காலிக தீர்வு, குறுங்கால தீர்வு, நீண்டநாள் தீர்வு என்பவற்றுக்கான ஆலோசனைகளை மொரட்டுவை பல்கலைக்கழகம் பெற்றுக்கொடுக்கும் என்றார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...