களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் இன்று (28) காலைத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.