follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுவெலிகந்த பெண்ணின் மரணம் - பொலிஸாரின் அறிவிப்பு

வெலிகந்த பெண்ணின் மரணம் – பொலிஸாரின் அறிவிப்பு

Published on

பொலன்னறுவ, வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் 19 வயதுடைய, திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தீக்குளித்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கும், அங்கிருந்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (24) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...