follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2'பொஹட்டுவ வேட்பாளராக நான் தயார்'

‘பொஹட்டுவ வேட்பாளராக நான் தயார்’

Published on

முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய மஹிந்த ராஜபக்ஷ யுக புருஷர் மீது எமக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், அவருடைய சகோதரனைப் பின்பற்ற நாங்கள் கோழைகள் அல்ல. அடிமைகள் அல்ல. மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர கடந்த 30ஆம் திகதி பதுளை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது மேற்கண்டவாறு மஹிந்த ராஜபக்ஷவை நினைவு கூர்ந்தார்.

பதுளை சைமன் பீரிஸ் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் தொடர்ந்தும் கூறுகையில்;

“.. 69 இலட்ச மக்களும் பசிலுக்கு அல்லது நாமலுக்கு வாக்களிக்கவில்லை. அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் தனிநபர்களுக்கு வாக்களிக்கவில்லை. குடும்பங்களுக்கு வாக்களிக்கவில்லை. இந்த நாட்டின் நாகரீகத்தை நம்பி, தேசபக்தர்கள் என்று நம்பி, இந்த நாட்டை நேசித்தவர்களே வாக்களித்த மக்கள்.

69 இலட்சம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற மௌபிம ஜனதா கட்சி முன்வந்தது என்பது இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்தால் ஏன் அவர்கள் தெரிந்திருக்க கூடாது என்று நான் கேட்க விரும்புகிறேன். அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்தனர், ஏன்? அவரை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டாம் என்றே அவ்வாறு வாக்களித்தனர்.

நமது மொட்டுக்கு (பொஹட்டுவ) துரோகம் செய்ய முயற்சிகள் இடம்பெறுகின்றது. அது எங்களின் மொட்டு. இது புதிய இலங்கை என்றும் அந்த பொஹட்டுவ எமக்கு சொந்தம் என்றும் கூறினோம். அந்த பொஹட்டுவையில் உள்ள வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து மக்களை அடிமைகளாக நடத்தும் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல என்று நான் கூறுகின்றேன்.

நான் ஒருபோதும் விரும்பாத ஒரு நபர். இந்த நாட்டை நேசிக்காதவர். நாட்டின் நாகரிகத்தின் மீது அன்பு இல்லாதவர். ஒரு போலி நபர். இப்போது பொதுத் தேர்தல் என்று கூறுகிறார். இலங்கையில் தேர்தலை அமெரிக்கர் தீர்மானிக்கிறாரா? விடுமுறையில் இருக்கும் அமெரிக்கர் தேர்தலை தீர்மானிக்க முடியுமா? இதை மக்கள் கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொஹட்டுவவில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இல்லை என பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். எந்தப் பொஹட்டுவவிற்கு என நான் கேட்கிறேன்..? பசிலின் பொஹட்டுவயிற்கே இல்லை. திலித் ஜயவீர மக்களின் பொஹட்டுவையில் உள்ளார் என்பதை நினைவில் வைத்திருக்கட்டும்.

இருவழி அரசியல் முடிந்துவிட்டது. அதனால்தான் எனக்கு ஆவேச அரசியல் பிடிக்காது. இந்தச் செய்தியை இன்னும் சுருக்கமாகச் சொல்ல முயற்சித்தேன். இலங்கையில் எம்மை நேசிக்கும் மக்கள் ஒருபோதும் சோகமாக இருக்க மாட்டார்கள். ஒருபோதும் வருத்தப்படவும் மாட்டார்கள். உங்கள் வாழ்க்கை மாறும்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...