follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2ஜப்பானிய முதலீட்டாளருக்கு 30 வருட குத்தகைக்கு விடப்படும் புறக்கோட்டை மிதக்கும் சந்தை

ஜப்பானிய முதலீட்டாளருக்கு 30 வருட குத்தகைக்கு விடப்படும் புறக்கோட்டை மிதக்கும் சந்தை

Published on

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவருக்கு முப்பது வருட குத்தகை அடிப்படையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (27) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகாரசபையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர் அகிரா ஹிரோஸ் (Akira Hirose) தலைமையில் இடம்பெற்றது.

அதன்படி, புறக்கோட்டை மிதக்கும் சந்தையின் முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டை இந்த ஜப்பானிய முதலீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும்.

இந்த மிதக்கும் சந்தை வளாகம் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என கடந்த காலங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் அவதானம் செலுத்திய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தற்போது நாட்டில் பொருளாதார பிரச்சினைகளுடன் இதனை அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியை அரச தனியார் பங்களிப்பின் கீழ் அபிவிருத்தி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இது ஜப்பானிய முதலீட்டாளருக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். வெளிநாட்டு முதலீட்டாளர்களை குறிவைத்து புறக்கோட்டை மிதக்கும் சந்தை வளாகம் சுற்றுலா நகரமாக நிறுவுவதே இதன் நோக்கமாகும். அதன் அபிவிருத்தித் திட்ட காலம் 6 மாதங்கள் ஆகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...