follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP2சுகாதார சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமா?

சுகாதார சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமா?

Published on

சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதியை வழங்குவதற்கு நிதியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இன்று (27) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சங்கங்களின் ஒன்றியம் தெரிவிக்கிறது.

72 சுகாதார சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்காகவே இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டதாக கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

கடந்த 19 மற்றும் 20ம் திகதிகளில் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தத்திற்கு தயாராகி கொண்டிருந்த போது, ​​சுகாதார செயலாளர் நிதியமைச்சகத்துடன் கலந்துரையாடி தீர்வு காண பத்து நாட்கள் அவகாசம் கேட்டதால், கூட்டமைப்பு தனது தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்தியது.

அந்தக் கால அவகாசம் நாளையுடன் (28ஆம் திகதி) முடிவடைவதால், சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதி வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அனுமதி வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படுமாயின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கத் தீர்மானம்

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து...

ஜனவரியில் நாட்டை வந்தடைந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள்

வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஜனவரி மாதத்தில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி...