follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1"இரகசியமாக சாட்சி வழங்கக் காரணம், உயிருக்கே அச்சுறுத்தல்"

“இரகசியமாக சாட்சி வழங்கக் காரணம், உயிருக்கே அச்சுறுத்தல்”

Published on

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவர் மீண்டும் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அதாவது, “.. சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் தனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே நான் இந்த கருத்துக்களை தெரிவித்தேன். நான் அச்சந்தர்ப்பத்திலேயே இந்த கருத்து தொடர்பில் நீதிமன்றில் கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்கவும் கேட்டுக் கொண்டேன்.

நான் நீதிமன்றில் எனக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். எனக்கு உத்தரவு பிறப்பிக்கப்படின் நான் இரகசியமாக சாட்சி வழங்க எதிர்பார்த்துள்ளேன்.

இரகசியமாக சாட்சி வழங்கக் காரணம் என்னவென்றால், திறந்த சாட்சியாக நான் மாறினால் என்னுடைய உயிருக்கும் சில நேரம் என்னுடைய மனைவி பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இது அரசியல் நோக்கங்களுக்காக அல்லது அரசியல் இலாபங்களுக்காக இந்த கருத்தினை நான் கூறவில்லை. மிகவும் நேர்மையாகவே கருத்தினை தெரிவித்தேன்..”

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லை என்று கூறிய அவர், விவரங்களை வெளியிட தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த தகவல்களை கண்டிப்பாக இரகசியமாக வைத்திருப்பது நீதிபதிகளின் பொறுப்பு என்றும் கூறிய கருத்தினால் இந்நாட்களில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டியை உலக புராதன கேந்திரத் தலமாக மாற்ற திட்டம்

கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035 ஆம்...

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில்...

இந்நாட்டு குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றது – NCMEC

இந்த நாட்டில் குழந்தைகளின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி அமெரிக்க அரசாங்க நிறுவனம் ஒன்று...