உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட 63 பேரையும் டிசம்பர் மாதம் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (25) உத்தரவிட்டார்.
இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.