follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசிங்கராஜா வனத்தில் 2 யானைகளில் ஒன்றை காணவில்லை

சிங்கராஜா வனத்தில் 2 யானைகளில் ஒன்றை காணவில்லை

Published on

சிங்கராஜ வனாந்தரத்தில் காணப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றை காணவில்லை என சிங்கராஜ வனாந்தரத்தின் பாதுகாப்பு அதிகாரி சரத் விஜேதுங்க இன்று (20) தெரிவித்தார்.

அத்துடன் இவ்விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்ட யானைகள் பாதுகாப்பு அமைப்பு நீர்வீழ்ச்சி சுற்றாடல் அமைப்பு ஆகியன தமது அவதானத்தை செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

சிங்கராஜா வனாந்தரத்தின் இரத்தினபுரி எல்லையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் தென் மாகாண காலி நெலுவ வரையுள்ள பரந்த பிரதேசத்தில் உலாவி வந்த இந்த இரண்டு யானைகளை அடையாளம் காண்பதற்காக ஒரு யானையின் கழுத்தில் கருப்பு நிற கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த இரண்டு யானைகளும் சிங்கராஜ எல்லையை தாண்டி இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை மாணிக்கவத்த மற்றும் கலவான பொதுபிட்டிய வன பிரதேசங்களில் உலாவி பல உயிர்களை பலி எடுத்தவைகளாகும்.

எனவே இந்த இரண்டு யானைகள் காணாமல் போதல் குறித்து அவதானத்துடன் விழிப்புடன் இருப்பதாக சிங்கராஜ வனாந்தர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...