நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக தெதுறு ஓயாவின் 08 வான் கதவுகள் இன்று (25) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெதுறு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளான வாரியபொல, நிகவரெட்டிய, மஹவ, கொப்பெய்கனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டு மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் வௌ்ள அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.