follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசுங்க அதிகாரிகள் இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில்

சுங்க அதிகாரிகள் இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில்

Published on

மேலதிக நேர சேவைகளில் இருந்து விலகுவதற்கான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (18) 4ஆவது நாளாகவும் தொடரும் என சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தரப்பில் இருந்து தீர்வு கிடைக்காமையால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் அமில சஞ்சீவ தெரிவித்தார்.

இதேவேளை, சுங்க தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழில்சார் நடவடிக்கைகளினால் பெருமளவிலான கொள்கலன்கள் துறைமுக பரிசோதனை முற்றத்தில் தடைப்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, பல சுங்கச் சங்கங்கள் மேலதிக நேரச் சேவைகளில் இருந்து விலகி, தொழில்துறை நடவடிக்கையைத் தொடங்கின.

சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் கீழ் உள்ள கணக்கை நிதியமைச்சகத்திற்கு ஒதுக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழில்முறை நடவடிக்கையில் சுங்க அதிகாரிகளின் சங்கம், சுங்க கண்காணிப்பாளர்களின் சங்கம் மற்றும் சுங்க ஊழியர்களின் சங்கம் ஆரம்பித்திருந்தது.

இது தொடர்பான விசாரணையில் நிதியமைச்சகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...