follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டுஐபிஎல்லில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர்

ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர்

Published on

எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து இங்கிலாந்து அணியின் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர் ஹாரி புரூக் விலகியுள்ளார்.

பாட்டியின் மரணம் காரணமாக போட்டியில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் வீரர் ஏலத்தில் ஹாரி புரூக்கை 4 கோடி இந்திய ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியது.

எனினும், ஹாரி புரூக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்படும் வீரர் யார் என்பது குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

கடந்த மாதம் தனது பாட்டி இறந்ததால் இந்த முடிவை எடுத்ததாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் கூறினார்.

ப்ரூக் கூறுகையில், தனது பாட்டி சிறுவயதில் இருந்தே தனக்கு நிழலாக செயல்பட்டதாகவும், அதனால் இந்த மரணம் தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாக இருந்தது.

ப்ரூக்கின் பாட்டி பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...