follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2பலஸ்தீன நிலத்தில் கட்டப்படும் இஸ்ரேலிய குடியிருப்புகள்

பலஸ்தீன நிலத்தில் கட்டப்படும் இஸ்ரேலிய குடியிருப்புகள்

Published on

மேற்குக் கரையை மையமாகக் கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப் பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் ஒரு வருடத்திற்குள் வரலாறு காணாத வகையில் விரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2023 ஒக்டோபர் வரையிலான ஒரு வருடத்தில் மேற்குக் கரையில் 24,300 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டிலிருந்து ஒரு வருடத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய வீடுகள் இதுவாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக் கரையில் நீண்டகாலக் கட்டுப்பாட்டை வைத்திருப்பதை இஸ்ரேல் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மேற்குக் கரையில் உள்ள ஐ.நா மனித உரிமை அலுவலகம் கூறுகிறது.

இதற்கிடையில், மேற்குக் கரையில் வன்முறையும் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல்கள் முடுக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் தாக்குததாரிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் படைகள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...