பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட் நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தம் வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் படிப்படியாக குறையும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.