follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடு"மேதகு" : சர்ச்சையான நாடாளுமன்றம் (Video)

“மேதகு” : சர்ச்சையான நாடாளுமன்றம் (Video)

Published on

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை “மேதகு” என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோது, குழப்ப நிலை ஏற்பட்டது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்

இதனை மறுக்கும் வகையிலேயே செல்வராசா கஜேந்திரன்,தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை “மேதகு” என்று தெரிவித்துள்ளார்

இதன்போது ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல எழுந்து, பயங்கரவாத தலைவர் ஒருவரை இலங்கையின் நாடாளுமன்றத்தில் “மேதகு” என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துரைத்த சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் உரிமை என்று குறிப்பிட்டார்.

எனினும் இது தொடர்பில் தாம் சபாநாயகருக்கு தெரியப்படுத்துவதாக குறிப்பிட்டார்.

எனினும் ஹன்சார்ட்டில் (பதிவேடு) இருந்து குறித்த பதத்தை நீக்கவேண்டும் என்று சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம், சபையின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அதனை சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமக்கிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், இந்த விடயத்தை சபாநாயகருக்கு அறிவிக்க மாத்திரமே முடியும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு மத்தியில் உரையாற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கருத்துக்கள் இருக்கமுடியும். எனினும் அந்த கருத்துக்களை ஏனைய உறுப்பினர்களால் மௌனிக்கச்செய்யமுடியாது என்று குறிப்பிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட...

முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற...

மின் கடவுச்சீட்டு தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த...