follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1பதவி விலகத் தயாராகும் பிரதமர் மஹிந்த?

பதவி விலகத் தயாராகும் பிரதமர் மஹிந்த?

Published on

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக இணையத்தள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது

அந்தச் செய்தியில்,

“அநுராதபுரத்தில் ருவன்வெளிசாயவில் பௌத்த பெருமான விஜயம் செய்த எட்டு தளங்கள் இருக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஒன்பதாவது தளத்தை (விகாரையை) பிரதமர் மஹிந்த ராஜபக்ச திறந்துவைக்கவுள்ளார்.

இது பௌத்த மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், இது பௌத்த பெருமானின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ருவன்வெளியாவில் சேர்க்கப்படாது என்ற கருத்தும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த நிலையில், குறித்த விகாரையை திறந்துவைத்த பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகி, அரசியலில் இருந்து ஓய்வு பெற மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரின் உடல் நிலை மோசமாகி வருவதால் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் பதவிக்கு பசில் ராஜபக்சவை அல்லது நாமல் ராஜபக்சவை நியமிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக பிரதமருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன”

நன்றி : மலையக குருவி

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரு வீதிகள் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள ஸ்ரீமத் பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை இன்று (27) முதல்...

இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஜப்பான் தயார்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியான ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான்...

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...