பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு இன்று கொழும்பில் சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலதிக கொடுப்பனவு , அடிப்படை சம்பள அதிகரிப்பு, 12 ஆண்டு சேவையுடைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சுகாதார தொழிற்துறையினரின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வைத்தியர்கள் , தாதிகள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.