நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்ப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும், முத்துராஜவெல களஞ்சியத்திலிருந்து 40,000 மெற்றிக் டொன் டீசல் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை 36,000 மெட்ரிக் தொன் பெற்றோலை இறக்குமதி செய்யவுள்ளதகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை எனவும் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமென இலங்கை மொத்த பெற்றோலிய களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.