follow the truth

follow the truth

March, 17, 2025
Homeஉள்நாடுஆர்ப்பாட்டத்தின் ஒருங்கமைப்பாளர்ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கமைப்பாளர்ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கமைப்பாளர்ளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த அரசாங்கத்திற்கு எதிரான பேரணி கொழும்பில் நேற்று இடம்பெற்றது.

உர தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்சினை, சீமெந்து, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை ஒழுங்குசெய்தவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கப்பார்களெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – பூஸா சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம்...

ஜனாதிபதி – சுற்றுலா அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு...