கொள்ளுப்பிட்டி வாலுகாராம உட்பட பஞ்ச மகா விகாரை விகாராதிபதி விசித்ர பானக வண. மஹரகம நந்த நாயக்க தேரரின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொள்ளுபிட்டி வாலுகாராம விகாரையில் நிறுவப்பட்டுள்ள கீர்த்தி ஸ்ரீராஜசிங்க நரேந்திரனின் உலோகச் சிலையை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.
தாய்லாந்திலுள்ள மகாசங்கத்தினர் உள்ளிட்ட தாய்லாந்து நன்கொடையாளர்களின் ஆதரவுடன் இந்த உலோக சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க நரேந்திரனின் உலோகச் சிலையும் ஜனாதிபதி திறந்து வைத்தார். இதனுடன் இணைந்ததாக விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வண. வெலிவிட்ட சரணங்கர சங்கராஜ தேரரின் சிலையும் திரைநீக்கம் செய்யப்பட்டது.
இலங்கை மற்றும் தாய்லாந்தில் பௌத்த மதத்தின் மேம்பாட்டுக்காக விசேட பங்காற்றிய உடோம் தம்மானுகுல் விபன்பாவ் தேரருக்கும், துறவி லுவாம் பு ஸ்ரீஷி கெத்கேவ் சார்பில் பேராசிரியர் நுவான் காவிந்த விஜேசிங்கவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசுகளை வழங்கினார்.