follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP1புதிய கட்சி ஊடாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா?

புதிய கட்சி ஊடாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா?

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் சரத் பொன்சேகாவின் தலைமையில் கட்சி சார்பற்ற மக்கள் சக்தி (Non-Party People’s Force) என்ற புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஜனவரி 03ஆம் திகதி உருவாக்கப்பட்டது.

நாட்டின் எதிர்காலத்திற்காக கட்சி பேதமின்றி தேசிய அபிவிருத்திக் கொள்கைகளின்படி செயற்பட வேண்டும் என்பதையும் இது காட்டுகிறது.

அண்மையில், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் கட்சியில் இணைந்தமைக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இதனால் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய சூழல் உருவானது.

தயா ரத்நாயக்கவை கட்சியில் இணைத்துக்கொண்டால், இப்போது கோட்டாபய ராஜபக்ஷவையும் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியும் என சரத் பொன்சேகா பகிரங்கமாக ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக அனுபவிக்கும்  சமூகத்தை உருவாக்குவதே அரசின் எதிர்பார்ப்பு 

அபிவிருத்தியின் முழு பலன்களையும் நியாயமாக அனுபவிக்கும்  வளமான சமூகத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார...

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற...

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில்...