follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுபயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published on

1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (15) கையளிக்கப்பட்டது.

அக்குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில், இந்த அறிக்கையின் முதற் பிரதி, ஜனாதிபதியிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள உரையாடல்களைக் கவனத்திற்கொண்டு, 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, 2021 ஜூன் 24ஆம் திகதியன்று, மேற்படி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிட்டியவில் தபால் மூல வாக்குகளை குறிக்கும் மேலதிக நாள் இன்றாகும்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் மேலதிக நாள் இன்று (18) செயற்படுகின்றது. கடந்த 14ஆம்...

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது...

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...