follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடு180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் துனீசிய பிரஜை கைது

180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் துனீசிய பிரஜை கைது

Published on

180 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 4 கிலோ 527 கிராம் கொகேய்னுடன் துனீசிய பிரஜை ஒருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கலாநிதி பட்டம் பெற்ற சர்வதேச நிதி நிறுவனமொன்றின் தலைவர் என்பதை காட்டும் போலி ஆவணங்களையும் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் துனீசியாவிலிருந்து பிரேசிலுக்கு பயணித்து, அங்கிருந்து தோஹாவிற்கு சென்று பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பயணியொருவரால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட அதிகூடிய கொகேய்ன் தொகை இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட கொகேய்னுடன் குறித்த சந்தேக நபரை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...