follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1ஸ்தம்பிதமாகும் கொழும்பு நகரம் : அரசாங்கம் எச்சரிக்கை

ஸ்தம்பிதமாகும் கொழும்பு நகரம் : அரசாங்கம் எச்சரிக்கை

Published on

ஐக்கிய மக்கள் சக்தியினால் எதிர்வரும் 16ம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக கொவிட் தொற்று மேலும் பரவுவதற்கான சாத்தியம் உள்ளமையினால், மக்கள் ஒன்று கூடுவதற்கு தன்னால் இடமளிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தினால் வழங்கப்படும் உத்தரவிற்கு அமைய பொலிஸார் நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தமது அரசாங்கத்துடன் இணைந்து, வைரஸ் பரவலை தடுப்பதே எதிர்கட்சியின் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

மக்கள் இவ்வாறு ஒன்று திரளும் பட்சத்தில், வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டு, புதிய வைரஸ் அலைகள் ஏற்படும் என சுகாதார பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் இதன்போது நினைவூட்டினார்.

சட்டவிரோதமாக மக்கள் ஒன்றுகூடுவதை நீதிமன்ற உத்தரவை பெற்று தாம் நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முன்னின்று செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்புடும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குவிந்துள்ள வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்பு

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய...

இன்று நள்ளிரவு முதல், பழைய முறையிலேயே விசா

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. வீசா...

“பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துங்கள்” – பிரதமர்

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்துள்ள விடயங்கள்...